புது வரவு

ரெங்கசாமி ராதாகிருஷ்ணன் எழுதிய "இங்கிட்டும்...அங்கிட்டும்" என்ற நூலை படிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிட்டியது. ஆசிரியர் தன் கையெழுத்திட்ட பிரதியை அனுப்பியிருந்தார். அதைப்படித்து முடித்தவுடன் நான் என் பால்ய ப்ராயத்திற்க்கே சென்று விட்ட உணர்வை  ஏற்படுத்தியிருந்தார். வீடியோ கேம்ஸ் மற்றும் செல்போன் இல்லாத ஒரு பிள்ளைப்பிராயத்தை அழகாக சித்தரித்து இருக்கிறார். ஆசிரியர் மதுரைக்காரர். தமிழ் பிறந்த மண் அது. அந்த மண் வாசனை குறையாமல் கிராமப்புறங்களின் மனிதர்களை, அவர்களின் குறை நிறைகளை ஒரு மண்ணின் மைந்தனுக்கே உரிய உள்ளுணர்வுடனும் … Continue reading புது வரவு